முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு நாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாங்காக் : தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.

தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாரோ கோனோவைச் சந்தித்தார். அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து