முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம்  நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.    
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகாய். இவர் தனது பதவி காலத்தில் அயோத்தி, ரபேல், சபரிமலை விவகாரம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்  முன்கூட்டியே அவரது பணிக்காலம் நிறைவடைந்தது. 

இந்நிலையில், தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் தனது மனைவி ரூபாஞ்சலியுடன் நேற்று திருப்பதி சென்றார். அங்கு வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து