முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது - உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித்தேர்தல் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூடுகிறது. தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்புகிறார். அவர் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கிறார். 

முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பிரியா, மாநில தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய ஆணையர் நியமனம் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. தகவல் ஆணையர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்கேற்புடன் நடைபெறவேண்டும் என்பது விதியாகும். அது பற்றி இந்த விவாதித்ததில் பேச வேண்டும் என்று தெரிகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான தேதிக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்றும் புதிய தொழில்முதலீட்டு ஒப்பந்தங்களுக்கும் அனுமதிளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் புதிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து