முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோவில் 4 மணி நேரம் நடை அடைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

நாளை 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை கோவிலின் நடை, சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாளை 26-ம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என  திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை 26-ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும்  என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து