எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது என்று சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
சென்னை தலைமை செயலகத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-.
சமூக, கலாச்சார உறவையும் தாண்டி, பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான உறவு மிகவும் நெருக்கமடைந்து வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வெற்றியும் இதற்கு காரணம். அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கா வாழும் இந்தியர்கள், முதலீட்டாளர்கள் இரு தரப்பினருமே இந்தியாவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் குறிக்கோள் ஆகும்.
தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகும். தமிழ்நாடு முதலீட்டிற்கு உகந்த மாநிலம். மிகச் சிறந்த நிர்வாகம், அதிக முதலீடு செய்யும் வாய்ப்புகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு சாதனைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னனி வகிக்கிறது என்று பல செய்தி குழுமங்களின் செய்திகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் தனிப்பட்ட பார்வையாளர்களும் வெளியிட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் அறிந்திருப்பீர்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி இதற்கு நிரூபணமாக உள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வதற்கான உத்தரவாதமாக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும்பங்காற்றப் போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதுள்ள பார்ச்சூன் - 500 எனப்படும் உலகப் புகழ்வாய்ந்த கம்பெனிகளில், 62 கம்பெனிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தில் நிலவும் முன்னேறிய தொழில் சார்ந்த சுற்றுச்சூழல்கள் காரணமாக அமேசான், ஐ.பி.எம், பாக்ஸ்கான், டெல், போர்டு, கேட்டர்பில்லர் மற்றும் போயிங் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் இங்கு முதலீடுகளைச் செய்துள்ளன. தொழில்நுட்பத் துறையில் மேலும் வளர்ச்சியை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன. சென்னைக்கு 14.8 டி.பி.பி.எஸ். அலைவரிசையுடன் வரும் 3-சப்மெரின் கேபிள்கள், மாநிலத்தில் கிடைக்கும் மிகை மின்சாரம், உயர்திறன் கொண்ட மனித வளம் ஆகியவற்றின் காரணமாக, தகவல் பூங்காக்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள், தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. செலுத்திய வரிகளை திரும்ப பெறுவது, முதலீட்டுமானியம், உயர்திறன் படைத்த மனிதவளம், தரமான மின் விநியோகம், நவீன உட்கட்டமைப்புகள் நிறைந்த ஆறு விமான நிலைய வசதிகள், நான்கு பெரிய துறைமுக வசதிகள், திறமைக்கும் போட்டிக்கும் இடமளிக்கும் மாநிலம் போன்ற பல்வேறு தொழில்களுக்கு உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு விரும்பும் மாநிலமாகத் திகழ்கிறது.
சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டி, அரசு நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி, அவ்வப்போது தேவையான புதிய தொழிற்கொள்கைகளை அறிவித்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையிலும், வளர்ச்சிப் பாதையிலும் அழைத்துச் சென்றவர் எங்களது மகத்தான தலைவர் அம்மா. அவரது வழியில் செயல்படும் எங்கள் அரசு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை மேலும் மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
2018-லிருந்து புதிய தகவல் தொழில் நுட்ப கொள்கை, புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவு பதப்படுத்தும் கொள்கை, புதிய துணிநூல் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவை மட்டுமின்றி, மிக அண்மையில் மின்பேருந்து கொள்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது ஆகவே சந்தேகமின்றி, தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் நீங்கள் அனைவரும் இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இதில் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நிஷா பிஸ்வாலு, அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர் அம்பிகா சர்மா, பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸின் ஆலோசகர் முராரி, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், டபே நிறுவனத்தின் தலைமை தொடர்பாளர் எஸ்.வி.ராஜீவா நாக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.