முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் 8 மாநகராட்சி மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 

உள்ளாட்சித்தேர்தலையொட்டி மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் நகராட்சி,பேரூராட்சி மாநகராட்சி வார்டு வரையறை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளின் மேயர் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், துாத்துக்குடி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  திருச்சி, திருநெல்வேலி நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோயமுத்தூர், ஈரோடு ஆகிய ஏழு மாநகராட்சி மேயர்கள் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதற்கான உத்தரவை உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து