முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்வு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று  (டிசம்பர் 20) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 6 ரூபாய் உயர்ந்து 3,635 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இதன் விலை ரூ.3,629 ஆக இருந்தது. அதே போல, 29,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,080 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சென்னையில் கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று அதன் விலை ரூ.3,816 ஆக இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை 30,480 ரூபாயிலிருந்து நேற்று 30,528 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 48 ரூபாய் உயர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

கடந்த மூன்று நாட்களாக வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் நேற்று அதன் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.80 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அடுத்ததடுத்த மாதங்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் நிலவி வந்த நிலையில், டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அவ்வப்போது குறைந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்து காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து