எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் : களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்து, அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறிய பெங்களூரு பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். இவரை சேர்த்து 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவரும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை. சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுக்க குமரி மாவட்ட போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை (20-ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.
உபா சட்டம்
இதற்கிடையே கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் இவர்களை 30 நாட்கள் வரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்க முடியும். இதற்கிடையே அப்துல் சமீம், தவுபீக் தொடர்பான பின்னணி குறித்து தமிழக கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், இருவருக்கும் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், இப்போது இவர்கள் அல்ஹந்த் என்ற இயக்கத்தை தொடங்கி இளைஞர்களை சேர்த்து வருவதும் தெரிய வந்தது. இந்த இயக்கத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தனித்தனி தலைவர்கள் இருப்பதும், அந்த தலைவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து பயங்கரவாத பயிற்சி அளிப்பதும், கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.
இத்தகவல்களை திரட்டிய தமிழக கியூ பிரிவு போலீசார் குஜராத், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 17 பேரை கைது செய்தனர். இதில், டெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான அப்துல் சமீமின் கூட்டாளி. இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலையில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதிய கியூ பிரிவு போலீசார், கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
மூளையாக செயல்பட்டவன் கைது
இதில், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தது பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பது தெரிய வந்தது. மெகபூப் பாஷா, அவரது மும்பை கூட்டாளி இஜாஷ் பாஷா மூலம் 5 துப்பாக்கிகளை வாங்கி வந்து அவற்றை அப்துல் சமீம் உள்பட சிலருக்கு கொடுத்துள்ளார். துப்பாக்கி கிடைத்ததும், அப்துல் சமீம், களியக்காவிளை வந்து தவுபீக்கை தன்னுடன் சேர்த்து கொண்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்ததும், அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறியதும் பெங்களூரு பயங்கரவாதி மெகபூப் பாஷா என்பது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து மெகபூப் பாஷாவை பிடிக்க கர்நாடகா போலீசாருக்கு தமிழக கியூ பிரிவு போலீசார் தகவல் கொடுத்தனர். கர்நாடகா போலீசார், மெகபூப் பாஷாவின் இருப்பிடங்களை கண்காணித்தனர். இதில் அவர், பெங்களூரு மாநகர பகுதியில் குருப்பனாபால்யா பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அங்கு அதிரடியாக சென்ற கர்நாடக போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்தனர். இந்த தகவல் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
மெகபூப் பாஷா கைதானது குறித்து பெங்களூரு போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
17 பேருக்கு மூளைச் சலவை
மெகபூப் பாஷா, பெங்களூருவில் சமய வகுப்பு நடத்தி வந்துள்ளார். இங்கு பயில வந்த இளைஞர்களுக்கு பயங்கரவாத கருத்துக்களை கற்றுக் கொடுத்து மூளைச் சலவை செய்துள்ளார். இதன் மூலம் அந்த இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டி உள்ளார். இவர் மூலம் சுமார் 17 இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத செயல்களை வழி நடத்தும் கர்நாடக மாநில தலைவராகவும் மெகபூப் பாஷா இருந்துள்ளார். மெகபூப் பாஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்களில் அப்துல் சமீம், தவுபீக் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
6 பேரை பிடிக்க தீவிர வேட்டை
ஏற்கனவே இம்ரான்கான், ஹனிப்கான், இஜாஷ் பாஷா, லியாகத் அலி உள்பட 11 பேர் கைதாகி இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய தமிழக கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கைதான மெகபூப் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.