முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள டிரால் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் இருவர் உயிரிழந்தனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள வாச்சி பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் நேற்று மேலும் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் உள்ள ட்ரால் பகுதியில் உள்ள ஜாந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று பாதுகாப்புப் படையினர் அதிகாலை முதல் ஜாந்த் கிராமத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டு அவர்களைச் சரணடையக் கோரினர். ஆனால், தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஷோபியான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் வாசிம், அதில் பஷிர், ஜகாங்கிர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து