முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து மகாசபாவின் பிரிவினை அரசியலை நேதாஜி எதிர்த்தார் - மம்தா பானர்ஜி சொல்கிறார்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்தார் என்றும் மதச்சார்பற்ற இந்திய ஒற்றுமைக்காக அவர் பாடுபட்டார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜி பிறந்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய மம்தா, நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை நேதாஜி வலியுறுத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்துவது இந்திய ஒற்றுமைக்காக போராடுவதைக் குறிக்கும் என்று தெரிவித்தார்.

நேதாஜி இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தார். அவர் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராடினார், மேலும் அவரது மறைவு குறித்த புதிரை விடுவிக்க மத்திய அரசு துரிதமாக செயல்படவில்லை. சில கோப்புகளை மட்டும் வெளியிட்டனர். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 70 ஆண்டுகள் சென்ற பிறகும் அவருக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடானது என்றும் மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து