எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நேதாஜி நடத்திய இந்திய தேசிய ராணுவம் மற்றும் காந்திஜி நடத்திய பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டு பேசியதாவது,
இந்திய தேசிய ராணுவப் படையில் பணியாற்றிய தமிழர்களின் வீரத்தினை போற்றும் வகையில், “அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவச் சிலையை, திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ என தீர்மானித்து, இந்திய தேசிய ராணுவத்திற்கு புத்துயிர் அளித்து, ஆங்கிலேயரை எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக ராணுவ ரீதியாக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919-ம் ஆண்டு ஐ.சி.எஸ். தேர்வுக்கு படிக்க லண்டன் சென்றார். இந்தத் தேர்வில் இந்தியாவிலேயே நான்காம் இடம் பெற்றார். ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறையின் காரணமாக, தனது ராஜினாமா கடிதத்தை மாண்டேகு பிரபுவிடம் அளித்தார். உன் பெற்றோர் வருத்தப்பட மாட்டார்களா? என்று மாண்டேகு பிரபு கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்று சொல்லி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக பங்கு கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அதிக அளவில் மக்களை சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெறச் செய்தார். இதனால் நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர உணர்வு அதிகரித்து வந்தது. இவர், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பெரும் தலைவராக பார்க்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் வேகமாக வளர்ந்து வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கும் நிலைக்கு உயர்ந்தார். குஜராத் மாநிலம் அரிபுரா நகரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுபாஷ் சந்திரபோஸ் தலைவரானதற்கு, ரவீந்திரநாத் தாகூர் பாராட்டுக் கூட்டம் நடத்தி, அவருக்கு “நேதாஜி” என்ற பட்டத்தை அளித்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டு காலத்தில், அவர் மிகப் பெரிய விடுதலைப் போராளி என்று இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அவரது சுற்றுப்பயணமும், பிரச்சாரமும், அனல் பறக்கும் பேச்சும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களின் உணர்வை வேகமாக தூண்டி விட்டது. இதன் விளைவாக, 1939-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைக்காக நடந்த தேர்தலிலும் நேதாஜி வெற்றி பெற்றார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அக்கட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பசும்பொன் தேவர் திருமகனார் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். “இந்தக் கட்சி விரைந்து செயல்பட்டு, இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தரும்” என்றார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
நேதாஜியைப் பற்றி, காந்திஜி குறிப்பிடுகையில், ‘நானும் சுபாஷும் இந்திய விடுதலைக்காக போராடுகிறோம். ஆனால் போராடும் வழிமுறைகள் வெவ்வேறு விதமானது’ என்று குறிப்பிட்டார். பின்னர் நேதாஜி, நமது நாட்டின் விடுதலைக்காக பிற நாடுகளின் உதவிகளைப் பெற எண்ணினார். அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி, தரை வழியாகவே பயணம் செய்து, ஆப்கானிஸ்தானையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். நேதாஜி அவர்களை காணவில்லை என நாடே தவித்துக் கொண்டிருந்த வேளையில், ஜெர்மனியிலிருந்து நேதாஜி அவர்கள் முழங்க, மொத்த உலகமுமே இந்தப் போராளியை பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்க இந்த நிகழ்வும் ஒரு காரணமாக அமைந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது எங்கும் போர் விமானங்கள் குண்டுகள் வீசிக் கொண்டிருந்த நேரத்தில், எதற்கும் அஞ்சாமல், ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் வழியாக மூன்று மாதம் பயணம் செய்து ஜப்பானை அடைந்து, பின் சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு ராஷ் பிஹாரி தாஸால் தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு புது ரத்தம் பாய்ச்சி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தனது சீரிய பேச்சால் ஒவ்வொரு இளைஞனையும் போரில் பங்கு பெறச் செய்தார். இந்தியா விடுதலை பெற்றால் தான், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் விரைவில் விடுதலை அடைய முடியும் என்று அறைகூவல் விடுத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும், பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் ஆயிரக்கணக்கில் இந்திய தேசிய ராணுவத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இணைந்தனர். இவர்களில் பலர் இந்திய தேசிய ராணுவத்தின் உயர் பதவிகளிலும் இருந்தனர்.
நேதாஜியின் போராட்டத்திற்கு தமிழர்கள் பல வழிகளில் உதவி புரிந்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து பசும்பொன் தேவர் திருமகனாரால் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். அவரது இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப் பிரிவுக்கு ராணி ஜான்சி என பெயரிட்டிருந்தார். அதன் தலைவியாக வீரத் தமிழ்ப் பெண்ணான கேப்டன் லட்சுமி இருந்தார். இந்தப் படையில் கேப்டன் ஜானகி தேவர் என்ற தமிழ்ப் பெண்மணியும் பெரும் பங்காற்றினார்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் வளர்ச்சியைக் கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில், “மலேசியா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது என்றார். அதற்கு பதில் அளித்த நேதாஜி, இந்த தமிழர்கள் தான் பின்னாளில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் என்று கூறினார். இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜி நடத்திய இந்திய தேசிய ராணுவம் மற்றும் காந்திஜி நடத்திய பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.