முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் ரூ.6 கோடி செலவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சாலைகளை உறுதிப்படுத்திடும் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்திடும் வகையில் சிரமமில்லா போக்குவரத்திற்கு வசதியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலைகளை உறுதிப்படுத்தி மேம்படுத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி வாரணாசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 3.8கி.மீ தூரத்திற்கு சாலைகளை ரூ.4.22கோடியில் உறுதிப்படுத்துதல்,நெடுஞ்குளம்-கூடக்கோவில் சாலையை ரூ.1.23கோடியில் அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல்,பாப்புநாயக்கன்பட்டி சாலையை ரூ.57லட்சத்தில் மேற்பரப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6கோடி செலவில் நடைபெறவுள்ள சாலை உறுதிப்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நெடுங்குளம்,பாப்புநாயக்கன்பட்டி, திருமங்கலம்- மறவன்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்ததுடன்,சாலையோர மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நெடுங்குளம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை  சிறப்பாக பராமரித்து நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற அங்கீகாரத்தை பெற்று தமிழக முதல்வர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் ஒரு பழத்திற்காக ஏங்கி,கடைசியில் அந்த பழம் கிடைக்கவில்லை என்றால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல 5முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும்,அங்கீகாரங்களையும்,மக்கள் செல்வாக்கையும் பெற்றிட முடியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது தமிழ் இனத்திற்காக கிடைத்த  மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கடந்து பேசுகிறார்.இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.ஆகவே விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்த அங்கீகாரத்தை அவர்களால் ஏன் பெற முடியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை.முழமையாக ஆராய்ந்து பார்த்து முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளன்று நல்லாட்சி நடத்துகிற நாடு என தமிழகத்தை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல்  பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பரப்பினார்கள்.அது மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது விருது கொடுத்தவர்களை அடிப்போம் என்கிறார்கள்.இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழினத்திற்கு துரோகியாக உள்ளோரே தமிழினத்திற்கு கிடைத்த பெருமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என மக்கள் பேசுவதை எங்களால் கேட்கமுடிகிறது.இந்த விருது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கிடைத்த அடையாளம்.இதனை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது என்றால் இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது,குற்றம் கண்டுபிடிப்பது,விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,யூனியன் சேர்மன்கள் திருமங்கலம் லதாஜெகன்,கள்ளிக்குடி மீனாட்சிமகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி சண்முகப் பிரியா பாவடியன்,துணை சேர்மன்கள் வளர்மதி,கலையரசி,முனியம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,நெடுஞ்சாலைத்துறை டிவிசனல் இன்ஜினியர் பிரசன்னவெங்கடேஷ்,துணை செயற்பொறியாளர் சுகுமார்,உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,அரசு அலுவலர்கள்,அரசு ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து