முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. தங்கம் விலை கடந்த  1-ம் தேதி ரூ. 31,376 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது.

தங்கம் விலை அதன்பிறகு ஏறுவதும் கொஞ்சம் இறங்குவதுமாக  மாறி மாறி இருந்தது. இந்நிலையில் நேற்று (6-ம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.30,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.3862-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.49.80க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,800 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து