எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து, தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடந்தது. இந்திய அணியில் இரு மாற்றமாக முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சான்ட்னெர் மற்றும் சோதிக்கு பதிலாக மார்க் சாப்மன், வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் இடம் பிடித்தனர். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட அறிமுக வீரரான ஜாமிசன் நியூசிலாந்தின் உயரமான கிரிக்கெட் வீரர் ஆவார்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் (16.5 ஓவர்) குவித்து அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். நிகோல்ஸ் (41 ரன்), யுஸ்வேந்திர சாஹல் வீசிய சுழற்பந்தை முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கப்தில் 79 ரன்களில் (79 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.
மிடில் ஓவர்களில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு, இந்திய பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. அதாவது 55 ரன் இடைவெளியில் 7 பேர் வெளியேற்றப்பட்டனர். 197 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லரும், புதுமுக வீரர் கைல் ஜாமிசனும் கைகொடுத்தனர். ஜாமிசன் 2 சிக்சரும் பறக்க விட்டார். இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டதுடன் சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் விளாசினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் 73 ரன்களுடனும் (74 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாமிசன் 25 ரன்களுடனும் (24 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் ஜோடியாக திரட்டிய 76 ரன்கள், இந்த மைதானத்தில் 9-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்சமாகும்.
அடுத்து 274 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய பிரித்வி ஷா, முதல் ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விரட்டியடித்தார். ஆனால் இந்த உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. மயங்க் அகர்வால் (3 ரன்), பென்னட்டுவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ராஸ் டெய்லரிடம் பிடிபட்டார். பிரித்வி ஷா (24 ரன்) ஜாமிசனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ‘ரன் குவிக்கும் எந்திரம்’ கேப்டன் விராட் கோலியும் (15 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அவர் டிம் சவுதியின் இன்ஸ்விங்கரில் போல்டு ஆகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து நியூசிலாந்து பவுலர்கள் தொடுத்த துல்லியமான தாக்குதலில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் (52 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்தார். ஆனால் லோகேஷ் ராகுல் (4 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி தள்ளாடியது. இந்த சூழலில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், நவ்தீப் சைனியும் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் வகையில் மட்டையை சுழட்டினர். குறிப்பாக நவ்தீப் சைனியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு சிலிர்க்க வைத்தது. ஜேம்ஸ் நீஷத்தின் ஓவரில் பந்தை சிக்சருக்கு தூக்கிய அவர், கிரான்ட்ஹோமின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரியும் ஓட விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்த்து நியூசிலாந்து வீரர்கள் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.
கடைசி 6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்ட சமயத்தில், நவ்தீப் சைனி (45 ரன், 49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாமிசனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இதன் பின்னர் ஜடேஜா (55 ரன், 73 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) போராடிய போதிலும் பலன் இல்லை. அவர், நீஷம் வீசிய தாழ்வான புல்டாஸ் பந்தை ஓங்கி அடித்த போது, ‘லாங்-ஆப்’ திசையில் நின்ற கிரான்ட்ஹோமிடம் சிக்கினார். முடிவில் இந்தியா 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த புதுமுக வீரர் கைல் ஜாமிசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை 11-ம் தேதி மவுன்ட்மாங்கானுவில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து, கப்தில் (ரன்-அவுட்) 79, நிகோல்ஸ் எல்.பி.டபிள்யூ, (பி) சாஹல் 41, டாம் பிளன்டெல் (சி), சைனி, (பி) தாகூர் 22, ராஸ் டெய்லர் (நாட்-அவுட்) 73, டாம் லாதம் எல்.பி.டபிள்யூ, (பி) ஜடேஜா 7, ஜேம்ஸ் நீஷம் (ரன்-அவுட்) 3, கிரான்ட்ஹோம் (சி) ஸ்ரேயாஸ், (பி) தாகூர் 5, சாப்மன் (சி) அண்ட்(பி)சாஹல் 1, டிம் சவுதி (சி)சைனி(பி)சாஹல் 3, ஜாமிசன் (நாட்-அவுட்) 25, எக்ஸ்டிரா 14, மொத்தம் (50 ஓவர்களில், 8 விக்கெட்டுக்கு) 273, விக்கெட் வீழ்ச்சி: 1-93, 2-142, 3-157, 4-171, 5-175, 6-185, 7-187, 8-197
பந்து வீச்சு விவரம்
ஷர்துல் தாகூர் 10-1-60-2, பும்ரா 10-0-64-0, நவ்தீப் சைனி 10-0-48-0, யுஸ்வேந்திர சாஹல் 10-0-58-3, ஜடேஜா 10- 0-35-1, இந்தியா, பிரித்வி ஷா (பி) ஜாமிசன் 24, மயங்க் அகர்வால் (சி) டெய்லர், (பி) பென்னட் 3, விராட் கோலி (பி) சவுதி 15, ஸ்ரேயாஸ் அய்யர் (சி) லாதம், (பி) பென்னட் 52, லோகேஷ் ராகுல் (பி), கிரான்ட்ஹோம் 4, கேதர் ஜாதவ் (சி) நிகோல்ஸ், (பி) சவுதி 9, ஜடேஜா (சி) கிரான்ட்ஹோம், (பி) நீஷம் 55 ஷர்துல் தாகூர் (பி), கிரான்ட்ஹோம் 18, நவ்தீப் சைனி (பி) ஜாமிசன் 45, யுஸ்வேந்திர சாஹல், (ரன்-அவுட்) 10, பும்ரா (நாட்-அவுட்) 0, எக்ஸ்டிரா 16, மொத்தம் (48.3 ஓவர்களில், ஆல்-அவுட்) 251, விக்கெட் வீழ்ச்சி: 1-21, 2-34, 3-57, 4-71, 5-96, 6-129, 7-153, 8-229, 9-251
பந்து வீச்சு விவரம்
ஹாமிஷ் பென்னட் 9-0-58-2, டிம் சவுதி 10-1-41-2, ஜாமிசன் 10-1-42-2, கிரான்ட்ஹோம் 10-1-54-2, ஜேம்ஸ் நீஷம் 9.3-0-52-1.
இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அவர் கடைசியாக ஆடிய 3 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் அவர் விக்கெட் எடுக்காத பரிதாபம் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது.
“197 ரன்னுக்கு 8 விக்கெட் என்ற நிலையில் இருந்து மீண்டு நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்து விட்டது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். இதே போல் நாங்களும் பேட்டிங்கில் தடுமாறினோம். அப்போது ஜடேஜாவும், சைனியும் போராடி மீட்டெடுத்தனர் என்று இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.