எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
2 வது நாளாக விவாதம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார். மனோதங்கராஜ் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் ஏராளமாக மூடப்பட்டிருக்கின்றன என்றார். அதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்கையில்: தொழிற்சாலைகள் எங்கும் மூடப்படவில்லை. உண்மைக்கு மாறான தகவலை உறுப்பினர் கூறுகிறார். சமீபத்தில் கூட ரூ.4 ஆயிரம் கோடியில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதுபோன்று பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். எந்த தொழிற்சாலையும் மூடப்பட வில்லை. நோக்கியா தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. அந்த தொழிற்சாலையும் திறக்கப்பட்டு இருக்கிறது என்று பதிலளித்தார்.
பென்ஜமின் பேச்சு
அமைச்சர் பென்ஜமின் பேசும் போது, பொத்தாம்பொதுவாக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. சிறு,தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். சிறு தொழில் துவங்க ஏராளமான சலுகைகள், ஊக்கத்தை அளித்திருக்கிறார். தமிழகம் சிறுதொழிலில் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.
மனோ தங்கராஜ் பேசிய போது : அமைதி தான் உங்களது தாரக மந்திரம் என்கிறீர்கள். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறீர்கள் என்று கூறினார்.
ஓ.எஸ்.மணியன் பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: மக்கள் விரோத திட்டம் எதை கொண்டு வந்தாலும், அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்? அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடி அதனை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார். காவிரி நிதிநீர் ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றார்.
உங்கள் ஆட்சியில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? உங்களது பொதுக்குழுவில் எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டு போட்டோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அதனை எதிர்த்திருக்கிறோம். தமிழக ஜீவாதார உரிமைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறினார்.
பிறகு மனோ தங்கராஜ் பேசிய போது: நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து இந்த சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினீர்கள். அது என்ன ஆனது. நீங்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை எதிர்க்க மறுக்கிறீர்கள். விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன், வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்தது. அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, அதற்கு இங்கு குரல் கொடுக்கறீர்களே. உங்கள் எம்.பி.க்கள் அதிகம் பேர் பார்லிமெண்டில் இருக்கிறார்களே. அங்கு போய் குரல் கொடுங்கள். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. அங்கு போய் சொல்லுங்கள். சொல்ல வேண்டிய இடம் அது தான் என்று கூறினார்.
விஜயபாஸ்கர் பேச்சு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. தான். நீட் தேர்வு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நீங்கள். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறீர்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்தையும் கொண்டு வந்தது. இதையெல்லாம் நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்களே, அப்போது தட்டி கேட்டீர்களா? ஆனால் நாங்கள் தமிழக உரிமைக்காக பார்லிமெண்டையே முடக்கி இருக்கிறோம் என்றார்.
செங்கோட்டையன் பேச்சு
அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, நீங்கள் மத்திய ஆட்சியில் இருந்தபோது உர மானியம் ரத்து செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள். உர விலை ஏறியதற்கு யார் காரணம்? உரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்திற்கு ரூ.200 விலை உயர்வு ஏற்பட்டது. இதையெல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள் என்றார்.
எதிர்கட்சிகள் முயற்சி
முதல்வர் பழனிசாமி பேசுகையில், நான் பேரை சொல்ல விரும்பவில்லை. ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். எனவே தான் இந்த கேள்வி எல்லாம் எழுகிறது என்றார்.
மனோ தங்கராஜ் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் மத்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். சிறுபான்மை மக்கள் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறீர்கள்.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சட்டத்தால் எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லுகிறேன் என்று சவாலாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.