முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த முறை எங்களால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் : விராட் கோலி நம்பிக்கை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை மிகவும் மோசமாக இருப்பது குறித்து கவலை இல்லை, எங்களால் தொடரை வெல்ல முடியும் என்று விராட் கோலி தெரிவித்தார்.  இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்தில் மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1968-ம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது.

அதன்பின் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், 

எங்களுடைய உடற்தகுதி மற்றும் கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றை கொண்டே நாங்கள் தயாராகி உள்ளோம். இதனால் உலகின் எந்தவொரு அணிக்கெதிராகவும் எங்களால் போட்டியிட முடியும். இந்த வகையான நம்பிக்கையை நாங்கள் இந்தத் தொடரில் எடுத்துச் செல்வோம். கடந்த முறை நாங்கள் இங்கே வந்த போது தொடரை 0-1 எனத் தோற்றோம். தற்போது இருப்பது அதே அணியல்ல. தற்போது நாங்கள் முழுமையடைந்த அணியை பெற்றுள்ளோம்.

நியூசிலாந்து திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், சிறந்த பீல்டர்களை கொண்ட அணி. அவர்கள் எளிதான ஆட்டத்தை விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியான பயன்படுத்தி போட்டியை நம் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து