முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து கங்குலியை முந்திய கோலி

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை இந்திய கேப்டன் விராட் கோலி முந்தினார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று விராட் கோலி 11 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார். அவர் 7,223 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடனும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடனும், விவிவி எஸ்.லட்சுமண் 8,781 ரன்களுடனும், சேவாக் 8,503 ரன்களுடனும் உள்ளனர். விராட் கோலியை தொடர்ந்து சவுரவ் கங்குலி 7,212 ரன்களுடன் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து