முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரூ.34,000- ஐ நெருங்குகிறது தங்கம் விலை சவரன் ரூ. 280 உயர்ந்து - ரூ. 33,728-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 33,728-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 4,216-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 50-க்கு விற்பனையானது.

பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் தாக்குதல் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை நோக்கி  சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை கடந்த 2 மாதமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. மார்ச் 2-ம் தேதி ஒரு சவரன் ரூ. 32,040, 3-ம் தேதி ரூ. 32,300, 4-ம் தேதி ரூ. 33,024, 5-ம் தேதி ரூ. 32,976-க்கும், 6-ம் தேதி ரூ. 33,760-க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற வரலாற்று சாதனையை படைத்தது. 7-ம் தேதி ஒரு சவரன் ரூ. 33,656-க்கு விற்கப்பட்டது. 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டு விடுமுறை நாளாகும். இதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. இதில் தங்கம் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ. 26 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,181-க்கும், சவரனுக்கு ரூ. 208 குறைந்து ஒரு சவரன் ரூ. 33,488-க்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதிகப்படியாக உயர்வதும், குறைந்தால் மட்டும் சிறிதளவு குறைவது என்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 33,728-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ. 34. ஆயிரத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து