முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

ரோம் : இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியின் அனைத்து வீரர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. இந்த லீக்கின் முன்னணி அணியான திகழ்வது யுவென்டஸ். இந்த அணிக்காக விளையாடி வந்த டேனிலே ருகானிக்கு கொரோனா நோய் இருப்பது தெரியவந்தது.இதனால் யுவென்டஸ் அணி 121 வீரர்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்தது. வீரர்கள் மற்றும் அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அணி கேட்டுக்கொண்டுள்ளது.போர்ச்சுக்கலை சேர்ந்த தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொரோனா பிரச்சினைக்கு இடையில் ரொனால்டோ, அவரது தயாரின் உடல்நலக்குறைவால் போர்ச்சுக்கல் மடேய்ரா சென்றுள்ளார். அவரது தயாராக்கு செய்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.அதேபோன்று ரொனால்டாவுக்கும் வைரஸ் இல்லையாம். ஆனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதை போர்ச்சுக்கல் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். ‘செரி ஏ’ லீக்கில் விளையாடும் சம்ப்டோரியா அணியின் மனோலோ கேப்பியாடினியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.ஏப்ரல் 3-ந்தேதி வரை அனைத்து வகை போட்டிகளும் இத்தாலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து