முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் மே 28-ம் தேதி வரை கிரிக்கெட்டுக்கு தடை

சனிக்கிழமை, 21 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ம் தேதி வரை நடத்த வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து கிக்கெட் வாரியமும் கொனோரா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது.இதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ம் தேதி வரை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து