எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என கனடா மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க நீச்சல் சங்கம், நார்வே ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் நீச்சல் சங்கம், அமெரிக்க தடகள சம்மேளனம், உலக தடகள சம்மேளனம் ஆகியவை ஒலிம்பிக் போட்டியை தள்ளிப் போட வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தி இருந்தன.
இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஜூலை 24-ம் தேதி தொடங்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடா அணி பங்கேற்காது என்று கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை அறிவித்துள்ளன. அத்துடன் இந்த போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் முதல் நாடு கனடாவாகும்.
இது குறித்து கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனடா வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் அரசு ஆகியவை இணைந்து டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கனடா அணியை அனுப்ப வேண்டாம் என்று எடுத்து இருக்கும் கடினமான முடிவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்தால் அதனை மீண்டும் நடத்துவதற்கான முழு உதவிகளையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் இந்த போட்டியை தள்ளி வைப்பதால் உருவாகும் சிக்கல்களையும் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். வீரர், வீராங்கனைகளின் நலன் மற்றும் உலக சமூகத்தினரின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவுமில்லை.
இது வீரர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த போட்டிக்காக வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பம் மற்றும் கனடா மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரலாம். கனடா அரசு அறிவித்துள்ள பொது சுகாதார அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கும் முடிவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், சர்வதேச பாரா ஒலிம்பிக் கவுன்சிலும் எடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் சிட்னியில் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், உலகளவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நிலவும் கடினமான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இடத்தில் ஒன்று கூட வைக்க முடியாது. வீரர்கள் தங்களது சொந்த நலனுக்கும், தங்களை சுற்றி உள்ளவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.