முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்: நிறுவனர் சத்குரு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கோவையில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்களை தமிழக அரசு மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் தேவை ஏற்பட்டால் ஈஷா தன்னார்வலர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற தயாராகவும் இருக்கின்றனர்.

தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.பாதிப்புக்குள்ளாகும் இந்த பிரிவினரை பாதுகாத்திட உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும் முன்வரவேண்டும்.குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 2 நபருக்கான ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமையாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து