முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையை நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பட்ஜெட் அமர்வின் இரண்டாம் அமர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 29-ம் தேதியுடன் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து