முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவர்னர்களுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடல்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவர்னர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் இன்று  வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகின்றனர் .

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேச  துணைநிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இருந்து இன்று வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகின்றனர்  என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி நேற்று மதியம் வீடியோ  கான்பரன்சில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து