முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் இன்று தகவல்களை பகிர உள்ளார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் பிரதமர் மோடி தகவல்களைப் பகிர உள்ளார்.

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இரண்டு முறை நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விடியோ ஒன்றை பகிர உள்ளதாகவும், அதன் மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பகிரவிருக்கும் விடியோ எது தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும் என்பதை சொல்லாமல், இன்று காலை 9 மணிக்கு விடியோ ஒன்றை நாட்டு மக்களுக்கு பகிரவிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன்  9-வது நாளான நிலையில், மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று  உரையாற்றினார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், உயிரிழப்பு 50 ஆக உள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து