முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் நாடாளுமன்ற சபாநாயகர் லரிஜானிக்கு கொரோனா தொற்று

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

ஈரானில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரான அலி லரிஜானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஈரானில் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிபின் செயலாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஈரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா வைரசுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் பதிவாகி உள்ளது. ஈரானில் இதுவரை 50,468 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 3,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து