முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 537 - ஆக உயர்வு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. நாட்டின் நிதி தலைநகரும், மராட்டிய தலைநகருமான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா தொற்று நுழைந்து இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மராட்டியம் முழுவதும் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், மராட்டியத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து