முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவேம்பு கசாயம் போல் கபசுர நீரையும் குடிக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசே தேவையான நடவடிக்கை எடுத்து வருவதால் அனைத்து கட்சி கூட்டம் அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நிலவேம்பு குடிநீர் போல, கபசுர நீரையும் குடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் சில இடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் கிருமிநாசினி தெளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும். நன்மை தரும். நானும் அதை குடித்தேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசே தேவையான நடவடிக்கை எடுத்து வருவதால் அனைத்து கட்சி கூட்டம் அவசியம் இல்லை.தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறைவு என சொல்ல முடியாது. பின்னர் ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து