எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகிவிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்க தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலெக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் பேட்டி
கூட்ட முடிவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதனை தடுக்க அரசு முழு வீச்சுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இன்றும் ஆலோசனை நடத்தினேன். அரசு சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். அனைத்து கலெக்டர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
571 பேருக்கு பாதிப்பு
இன்று வரை தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்து 541 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 814 பேருக்கு 28 நாள் வீட்டு கண்காணிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் 621பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 11 ம், தனியாரிடம் 6 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதுதவிர மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதனையும் சேர்த்து மொத்தம் 38 ஆய்வகங்கள் செயல்படும் நிலை இருக்கும். இதன் மூலம் வேகமாக துரிதமாக பரிசோதனை நடக்கும். 3,371 வெண்டிலேட்டர்கள் இப்போது உள்ளன. தேவையான முக கவசங்களும் மருத்துவ உபகரணங்களும் உள்ளன.மேலும் 2 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய இன்று ஆர்டர் கொடுத்துள்ளோம்.
ரேபிட் சோதனை உபகரணங்கள்
ரேபிட் சோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உபகரணங்கள் 9 -ந் தேதி கிடைத்து விடும். 10 - ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன்.வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கக் கூடிய தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை வழக்குகள்
ஊரடங்கு மற்றும் தடை உத்தரவை மீறியதாக 94 ஆயிரத்து 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 94 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு முதல் கட்டமாக 500 கோடி தந்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதி உள்ளது. முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொற்று நோய் அதிகரித்து வருகிறதே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இந்த நோயின் தாக்கம், வீரியம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களான நீங்களும் சொல்கிறீர்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்தினால் இந்த நோய் வராது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான். எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.தொற்று நோய் எளிதாக பரவக் கூடியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அறிகுறி தெரியாமலும் வருகிறது
கொரோனா நோய் அறிகுறி தெரியாமலேயே பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இதனை கடைப்பிடித்தால் பரவுவதை தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டம் கொண்டு வருவது மக்களை துன்புறுத்த அல்ல, மக்கள் நலன் கருதித்தான் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டம் போடுகிறோம். அதனை நடைமுறைப்படுத்துவது மக்கள் தான் என்றும் அவர் கூறினார்.
நடமாட்டத்தை குறைக்க வேண்டும்
மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறோம். படிப்படியாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை அரசு செய்கிறது.நோய் வருவது இயற்கை. வந்தால் அதனை குணப்படுத்துவது நமது கடமை. நோய் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் குடும்பத்தை காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது ?
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளித்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.மேலும் அரிசி, ரேசன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் காய்கறி கடைகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.