முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு, குறு தொழிற்சாலைகளை நாளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 1 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் நாளை (3-ம் தேதி) திறப்பது குறித்து தொழில்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. (நாளை) 3-ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் தொழிற்சாலைகளை திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து தொழில்நிறுவனங்களை இயங்கச் செய்யலாம் என்று அரசு அதிகாரம் வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் 3-ம் தேதிக்கு பிறகு தொழில் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களையும் (நாளை) 3-ம் தேதி திறப்பது குறித்து தொழில்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறு குறு தொழிற்சாலைகளை செயல்பட வைத்தால் ஏராளமானோருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் நாளை  3-ம் தேதிக்கு பிறகு இந்த தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து எந்தெந்த தொழில் நிறுவனங்களை முதற்கட்டமாக திறக்க அனுமதி கொடுக்கலாம் என்பது பற்றியும் விரிவாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து