எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் போது அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய தொடர் ரத்தாகி விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய தொடர் நடைபெறாமல் போனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,480 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அந்த நாட்டு அரசுடன் விவாதித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகளில் இந்திய அணிக்காக சிலவற்றை தளர்த்த அந்த நாட்டு அரசு சம்மதித்துள்ளது. ஆண்டின் இறுதியில் மறுபடியும் சர்வதேச போட்டிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருந்து வருவோரை 2 வார காலம் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதை ஏற்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் சிங் துமால் கூறியதாவது:- வேறு வழியில்லை, ஒவ்வொருவரும் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். 2 வாரம் என்பது நீண்ட காலம் அல்ல. நீண்ட கால ஊரடங்கில் இருந்து விடுபட்டு இன்னொரு நாட்டுக்கு செல்லும் போது 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவது விளையாட்டு வீரர்களுக்கு நல்ல விஷயம் தான்.
ஊரடங்கு முடிந்த பிறகு எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். இந்த தொடரின் போது கூடுதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் (மொத்தம் 5 டெஸ்ட்) விளையாடுவது குறித்து முன்பே விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப காலக் இடைவெளி அமைந்தால் அவர்கள் விருப்பப்படி கூடுதலாக ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் அல்லது இரண்டு 20 ஓவர் போட்டிகள் சேர்க்கப்படலாம். இது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் முடிவை பொறுத்தது. ஆனால் ஊரடங்கு எதிரொலியாக நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதிகமான வருமானம் ஈட்ட வேண்டும் என்று தான் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும்.
கூடுதலாக ஒரு டெஸ்ட் போட்டியை தொடரில் இணைப்பதை காட்டிலும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் மூலம் தான் கணிசமான வருவாய் கிட்டும். மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியதும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவது கடினம் தான். கொரோனா பாதிப்பால் நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
நீண்ட காலம் எந்தவித பயிற்சியும் இன்றி நேரடியாக அதுவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியுமா? இதுபற்றி அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனத்தில் கொள்ளும். என்னை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடப்பது சந்தேகம் தான். 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டு, அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டுவதாக வெளியான தகவல் தவறானது.
இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை. முதலில் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்களுக்கும் அதில் விருப்பம் இருக்க வேண்டும். அதன் பிறகு 2 வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிறகு ஐ.பி.எல். விளையாட வேண்டும். இதுபற்றி எல்லாம் இப்போது எப்படி யோசிக்க முடியும்? ஐ.பி.எல். தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் யூகத்தின் அடிப்படையிலானது. கொரோனா தாக்கம் முடிந்து நிலைமை சரியான பிறகே மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்குவது குறித்து சிந்திப்போம் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.