முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடனான எல்லை பிரச்சினை: பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்கிறார் அதிபர் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான பெரிய மோதல் குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் நல்ல மனநிலையில் இல்லை.

நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள். இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து