முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், மே, 27ல் துவங்கி நடந்து வருகிறது. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாளை இந்த பணியை துவங்கி விரைவில் முடிக்க வேண்டும். ஜூன், 10 முதல், விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து