முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் : மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அவர் கூறியதாவது:

* குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது, ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம்.

* சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

* சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து