எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்கலில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் மதுரை மேற்குவட்டம் துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 25.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கண்மாய்களை சீரமைக்க முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2016 - 17ம் ஆண்டு தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.100 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்திற்கு கண்மாய்களை சீரமைக்க, ரூ.570.15 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகள் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயலாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2017-18 ம் ஆண்டு ரூ.331.00 கோடிக்கு, ஒப்பளிக்கப்பட்டு, அதில் மதுரை மாவட்டத்திற்கு கண்மாய்களை சீரமைக்க, ரூ.2,568.46 லட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டன.
மேலும் 2019 - 20 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்,நிலைகளை புனரமைக்க, ரூ.499.688 கோடிக்கு ஒப்பளிக்கப்பட்டு, அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை சீரமைக்க, ரூ.4,312.05 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக, கண்மாய்கள் புனரமைக்கும் பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டன. நடப்பு நிதியாண்டில்(2020 - 21) ரூ.499.7997 கோடி மதிப்பீட்டில், தமிழகம் முழுவதும் மொத்தம் 1,387 பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில், 56 பணிகளை மேற்கொள்ள, ரூ.3,121.60 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாய சங்கங்கள் மூலமாக பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மதுரை மேற்கு வட்டம், துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்கால்களை புனரமைக்கும் பணி குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடைபெற உள்ளது. கிருதுமால் நதி மூலம் பாசன வசதி பெறும் துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராம விவசாயிகளின் கோரிக்கையின்படி, கிருதுமால் ஆற்றின் 3 கிளைக் காய்வாய்களின் எல்லையினை நிர்ணயம் செய்து எல்லை கற்கள் ஊண்டி, கிளைக் கால்வாய்களை தூர்வாருதல், கிளைக் கால்வாய்களில் கான்கீரிட் சுவர்கள் அமைத்தல் மற்றும் கிருதுமால் அணைக்கட்டில் உள்ள சட்டர்களை சரிசெய்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.25.30 இலட்சங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விவசாயிகள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேற்கண்ட பணிகள் செயல்படுத்தப்படுவதால், கிருதுமால் நதி கிளைக் கால்வாய்கள் மூலம் சுமார் 102 ஹெக்டேர் பரப்பில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிமராத்துத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில மாணவரணி இணை செயலாளர் பா.குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற் பொறியாளர் லீலாவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.