முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் உகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தில் அது உலகம் முழுவதும் பரவி விட்டது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒருவருக்கு வெளிநாட்டு தொடர்பின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 326 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 245 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள உகான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு 126 மில்லியன் டாலர் (சுமார் ரூ.945 கோடி) செலவாகும். இதுவரை ஒரு கோடி பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில், ரஷ்ய எல்லையில் உள்ள முடஞ்சியாங் நகரத்திலும் அங்குள்ள 28 லட்சம் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு கடந்த வாரத்தில் 15 பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் இப்போது கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதார அதிகாரிகள் தங்களது நியூக்ளிக் அமில பரிசோதனை குழுவை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து