முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு தேர்வு காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு? : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். மற்றும் மாணவர்கள் 9.45 மணிக்குள் வர வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15-ம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11-ம் வகுப்பு மற்றும் 18-ல் 12-ம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மேலும், நேற்று முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருந்தது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும்  10-ம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 மணிக்கு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து