முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் புனிதப் பணியில் ஈடுபட உறுதியேற்போம் என அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை புறநகர் திருமங்கலத்தில் அம்மா பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானத்தை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியதாவது; 

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் லட்சியம் முழுக்கம் இட்டதை தனது வேதவாக்காக எண்ணி அம்மாவின் வழியில் பொற்கால ஆட்சியை நடத்தி 100 ஆண்டுகள் அல்ல இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தாய் தமிழகத்தில் கழகம் தான் ஆட்சி செய்யும் என்ற சிறப்பு உருவாக்கித் தந்து மட்டுமல்லாது.

இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் 27 சதவீத பங்கு தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா, கர்நாடகா என 5 மாநிலங்களின் பங்கு மகத்தானது என்று கூறப்பட்டுள்ளது இதில் முதன்மையாக அயராத உழைப்பால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயிர்தந்து மட்டுமல்லாது. இந்த கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்திய தேசமே பாராட்டும் வகையில் நோய் தடுப்பில் முதன்மை மாநிலமாகவும், குணமடைந்தோர் பட்டியலில் முதன்மை மாநிலமாகவும்,. இறப்பு சதவீதத்தில் குறைந்த மாநிலமாகவும் ,மருத்துவ பரிசோதனையில் அதிகமுள்ள மாநிலமாகவும் உருவாக்கித் தந்தது மட்டுமில்லாது, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை தொடர்ந்து மூன்று மாதங்களாக அரிசி, பருப்பு ,எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமல் வழங்கியது மட்டுமல்லாது, 35 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியும், அதனைத் தொடர்ந்து 37 வருவாய் மாவட்டங்களில் கட்டுப்பாடு அறை அமைத்து மக்களுக்கு தேவையான உதவி செய்தும், அம்மா உணவகம் மூலம் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏழு லட்சம் ஏழை எளிய மக்களை பயனடைய செய்தும், சமுதாய கூடங்களில் மூலம் தினந்தோறும் இரண்டு லட்சம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி எங்கேயும் பசியில்லாத நிலையை உருவாக்கி ,தமிழக மக்களின் அட்சய பாத்திரமாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.  இந்த 3 மாத தடை காலத்திலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்துகொடுத்து அதன் மூலம் விவசாயிகள் மகசூலை இரண்டு மடங்கு அதிகரித்து அதன்மூலம் ஒவ்வொரு விவசாயிகளின் பாதுகாவலராக முதல்வர் திகழ்ந்து வருகிறார். 

அதேபோல் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்தும், தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்போட்ஸ் என்ற குழுவை அமைத்தும், தமிழகத்தை வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொருளாதார ஞானியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார். அதேபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்களை தொடர்ந்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுத்து மட்டுமல்லாது பல்வேறு பெரிய நிறுவனங்களையும் தமிழகத்திற்கு தொழில் துவங்க கடிதம் எழுதி இதில் தொழில் முதலீட்டார்கள் என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளும் 24 நேரத்திற்குள் என்னை சந்திக்கலாம் என்று தொழில்மூதலீட்டர்களை ஊக்கப்படுத்தி உள்ளார்  மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தனி கவனம் செலுத்தி பல்வேறு அறிவுரை வழங்கி வருகிறார். 

இன்றைக்கு இந்த மூன்று மாத காலத்தில் மக்களுக்கு தேவையான அரிசி ,பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து மக்கள் போற்றும் நல்லரசாக அம்மாவின் அரசு திகழ்ந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு மக்களை திசை திருப்பும் வேலையாக மட்டும் கடமையாக எண்ணி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டாலினுக்கு மக்கள் பணி மறந்து பல வருடம் ஆகிவிட்டது ஆகையால் மக்களும் இவரை மறந்து பல வருடம் ஆகிவிட்டது. மக்களின் இதயங்களில் இருப்பவர் நமது முதலமைச்சர் தான் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஸ்டாலின் ஆதாரம் ,அடிப்படை இல்லாமல் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஆனால் ஸ்டாலின் நாடகத்தை பார்த்து ரசிக்க ஆளில்லை என்று உலகச் செய்தியாக ஆகி இருக்கிறது.

ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சுயநலமின்றி, ஊண் உறக்கம் இல்லாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அண்ணா காட்டிய வழியில், தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று புரட்சித்தலைவரின் இலக்கணத்திற்கு உயிர் கொடுத்து, நிர்வாகம் அனுபவம் வாய்ந்த சாமானியர் கையாளும் போது திறமை வெளிப்படும் என்று நம்மிடம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் திடமான, உறுதியான, தொலைநோக்கு சிந்தனையோடு, தீர்க்கதரிசனமான நடவடிக்கை இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் பாடமாக அமைந்து வருகிறது என்று முதல்வரை தாய் நாட்டு மக்கள் மனதார பாராட்டி, வாயாரப் புகழ்ந்து வருகின்றனர். 

இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் மகத்தான சாதனை திட்டங்களை மக்களிடத்தில் ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் எடுத்துச் சொல்வோம் என்று அம்மா பேரவையின் சார்பில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த கூட்டத்தில் அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,மதுரை மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ ,புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேதமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து