முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸ்கோ பாய் என அழைக்கப்படும் விளையாட்டு ஆர்வலர் உபைதூர் ரகுமான் மரணம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இந்திய  விளையாட்டு உலகில் ‘காஸ்கோ பாய்’ என்றழைக்கப்பட்டவர் டாக்டர் உபைதூர் ரகுமான். தீவிர விளையாட்டு ஆர்வலரான உபைதூர்  சென்னையில் வசித்து வந்தார். விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் காஸ்கோ இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்ததால், இவர் நாடு முழுவதுமுள்ள விளையாட்டுச் சங்கங்கள், அவற்றின் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து