முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013-ல் ஆசிரியர் தகுதித் தோ்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய வங்கியின் மூலம் இதுவரை நூறு கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு இ- பாக்ஸ் நிறுவனம் மூலம் 10 நாட்களாக மாணவர்களுக்கு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்.  அரசு பள்ளிகளில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து