முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் மாநில பா.ஜ.க. தலைவர்கள் காணொலி வாயிலாக விளக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண்சிங் நேற்று காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட ஊரடங்குக் காலத்தில் மக்களுக்காகச் செய்த பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர்கள் இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன் விளக்க வேண்டும். இவை அனைத்தும் ஆன்லைன் மூலம், காணொலி வாயிலாகக் கட்சியின் டிஜிட்டல் தளத்தில் நடைபெறும். 

லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் 22 கோடி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 80 லட்சம் சானிடைசர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.50 கோடி முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அறிமுகம் செய்த ஆரோக்கிய சேது செயலி குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டு, பிஎம். கேர்ஸ்க்கு நிதியுதவி அளிக்க மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வாறு அருண் சிங் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து