முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் பரமக்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், அவரது மகன், அவரது உதவியாளர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து