முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் அளவுகளை அதிகரிக்க ரூ.72 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, 

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரத்யேக தீவிர சிகிச்சைகள் ஸ்டான்லி மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 800 படுக்கைகள் உள்ள நிலையில் நோயாளிகளின் வருகை அதிகரிப்பதால் 1200 படுக்கை வசதிகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.75 கோடியே 25 லட்சம் செலவில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் அளவுகளை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜனை முறையாக கொடுப்பதன் மூலம் நோயாளிகளை குணப்படுத்த முடிகிறது. 

ஏற்கனவே வாயு ஆக்சிஜன் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது திரவ நிலையிலான ஆக்சிஜனாக கொடுக்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ திரவ ஆக்சிஜனில் 800 கிலோ ஆக்சிஜன் பெறப்படுகிறது. சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி சித்த மருத்துவ முறையை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஒரு பகுதியாக கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முன்னோட்டம் பார்க்கப்படவுள்ளது.

தொடர் பணியாக அதிகளவில் தமிழகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் ஆரம்ப நிலையில் கொரோனா கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகிறோம். 

கொரோனா குறித்த பதட்டம் வேண்டாம். முன்னச்சரிக்கையாக அரசு வழிமுறையை செயல்படுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுபடுத்தலாம். எந்தவித கட்டுபாடிகளின்றி அரசு மருத்துவமனைகள், கொரோனா பராமரிப்பு மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பு விகிதம் முன்னர் இருந்ததைவிட தற்போது குறைந்து நிலையான அளவிலேயே உள்ளது. அரசு வழிமுறைகள் அனைவருக்கும் ஒன்று தான். கொரோனா உறுதியான அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசினேன். அவர்கள் நலமாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா அறிகுறிகள் இருக்குமாயின் அவர்களுக்கு அந்த பகுதிகளில் உடனடியாக பரிசோதனை செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகள் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.

ஐ.சி.எம்.ஆரிடம் அனுமதி பெற்று  சென்னை, மதுரை, திருநெல்வேலியில் பிளாஸ்மா சிகிச்சை மையத்தின் மூலமாக பிளாஸ்மாவை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, முதல்வர் பாலாஜி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து