முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான், மிசோரமில் லேசான நிலநடுக்கம்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான், மிசோரமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. 

நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக நேற்று முன்தினம் மதியம் 2.35 மணி அளவில் மிசோரம் மாநிலத்தின் சம்பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகள் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நடுக்கம் பூமிக்கு அடியில் 52 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நிலநடுக்கங்களின் போதும் உயிர் இழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து