முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலாக நடவடிக்கை எடுத்தவர் சியாம் பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான நேற்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதா ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை பா.ஜ.க.வினர் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடினர். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 

சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். உணர்வுமிக்க நாட்டுப்பற்றாளரான அவர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உன்னதமான பங்காற்றியுள்ளார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் நேற்று சியாம் பிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனசங்கமே பின்பு பாரதிய ஜனதாவாக மாறியது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து