முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐந்து நிமிடத்திற்குள் 3 கோல்: யுவென்டஸ் அணியை வீழ்த்தியது ஏ.சி.மிலன்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ரோம் : செரி-ஏ கால்பந்து லீக்கில் 0-2 என பின்தங்கிய நிலையில், ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்து ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது.

இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான செரி-ஏ லீக்கில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திற்கான ஆட்டம் தொடங்கியதும் 47-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஆட்ரியன் ரேபியோட் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 53-வது நிமிடம்) நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவென்ஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

அதன்பின் ஏ.சி.மிலன் அணி வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 62-வது நமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இப்ராஹிமோவிச் அதை கோலாக்கினார்.

அதன்பின் 66-வது நிமிடத்தில் பிரான்ங் கெஸ்சி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ரபேல் லியோ கோல் அடித்தார். ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்ததால் 3-2 என ஏ.சி. மிலன் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 80-வது நிமிடத்தில் ஆன்டே ரெபிக் மேலும் ஒரு கோல் அடிக்க ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து