முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ம் தேதியில் இருந்து நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.  அதில் உஜ்வாலா திட்டத்தில் இடம்பிடித்துள்ள ஏழைகளுக்கு இலவசமாக சமையல் கியாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் வரை சிலிண்டர் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை ஜூலை 1-ம் தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் என அவர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து