முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசியல் பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இதில், அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து