முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 4,496 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4, 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் நேற்று  ஒருநாளில் 1,291  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரு நாளில் 68  உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,167ஆக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து