முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி: ராமதாசுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 32-ம் ஆண்டில் இன்று பாட்டாள் மக்கள் கட்சி அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (15.7.2020) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவி 31 ஆண்டுகள் நிறைவடைந்து, 16.7.2020 அன்று 32-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தமிழக முதல்வருக்கு நன்றி கூறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து